இதற்கிடையே பேராவூரணி விளங்குளம் பகுதியில் மர்மநபர்கள் சிலர், கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயை உடைத்து, ஏரிக்கு தண்ணீர் பாய்ச்சுவதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினருடன் சென்ற வட்டாட்சியர் ஆய்வு செய்து கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைப்பை சரி செய்தார். குடிநீர் வடிகால் வாரிய இளநிலைப் பொறியாளர் தங்கவேலு, வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் ஆய்விற்கு சென்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயை உடைத்து முறைகேடாக தண்ணீரை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

நன்றி:தீக்கதீர்
0 coment rios: