முன்னதாக அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆவணம் சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படலாம் என வந்த தகவலையடுத்து மதுக்கடை முன்பாக 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்ப ட்டிருந்தனர். பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் போலீஸ் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், வட்டா ட்சியர் பாஸ்கரன், கலால் வட்டாட்சியர் கோபி, காவல்துறை ஆய்வாளர்கள் பேராவூரணி ஜனார்த்தனன், திருச்சிற்ற ம்பலம் செந்தில்குமரன் ஆகியோர் அரசுத்தரப்பிலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி, அமைப்புகள் சார்பில் சிபிஐ பா.பாலசுந்தரம், காசிநாதன், கோபால், சிபிஎம் சார்பில் வீ.கருப்பையன், இரா.வேலுச்சாமி, வே.ரெங்கசாமி, த.ம.பு.க ஆறு.நீலகண்டன், திராவிடர் விடுதலைக்கழகம் சித.திருவேங்கடம், தாமரை செல்வன், மெய்ச்சுடர் வெங்கடேசன், ஆயர் த.ஜேம்ஸ், வீரக்குடி ராசா, ராஜாமணி, பைங்கால் மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: