தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவலர் குடியிருப்பு வளாகம் அருகே உள்ள தான்தோன்றி அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி அர்ச்சகர் சீனிவாச சிவாச்சாரியார் தலைமையில் யாகபூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்களில் இருந்த புனிதநீரால் சனீஸ்வரனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல வல்லம் கடைவீதியில் உள்ள சோழீஸ்வரர் சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

0 coment rios: