இதனால் வேறொரு புதிய கட்டிடத்தில் இடநெருக்கடியோடு வகுப்புகள் நடக்கிறது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராஜ் கூறியதாவது: 2 மாதங்களுக்கு முன் சொர்ணக்காடு ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு உடனடியாக அகற்ற கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். ஆனாலும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் இதுவரை சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை அகற்றியும், மற்றொரு கட்டிடத்தின் ஓடுகளையும் மாற்றித்தர வேண்டும் என்றார்.

நன்றி:தினகரன்
0 coment rios: