இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி, உள்பகுதியின் சுற்றுச்சுவர் மற்றும்தரையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள தூண்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளியின் அருகாமையில் அமைந்துள்ள இந்த மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்த நேரத்திலும்இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கஉத்தரவிட வேண்டுமென செருவாவிடுதி பகுதி பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:தீக்கதிர்
0 coment rios: