பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் - மணக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், விவசாய சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான வி.கருப்பையன் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, “வீரக்குடி வழியாக செல்லும் மணக்காடு- ரெட்டவயல் இணைப்பு சாலை வழியாக தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் சென்று வருகின்றன. இச்சாலையை மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர்பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 6 கி.மீ நீளமுள்ள இச்சாலை, கடந்த 5 வருடங்களாக செப்பனிப்படாமல் குண்டுங் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள், பேருந்துகள் இப்பகுதியில் செல்லமுடியாத நிலையில் உள்ளன.
வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதும், விபத்துகள் நடப்பதும் சர்வசாதாரணமாகி விட்டது. இதனால் பேருந்துகள் இவ்வழியே வருவதில்லை எனபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து,சாலை அமைத்து தரவேண்டும்” என அம்மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் கூறுகையில், “ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி ரெட்டவயல் கடைவீதியில் மறியலில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: