பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு பேசுகையில், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதாலும் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்துவதன் மூலமும் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். தண்ணீரை காய்ச்சி பருகுவதோடு சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கை பற்றி கூறுவதை பெற்றோர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
இதைதொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது. டாக்டர்கள் இலக்கியா, கோகிலா, தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், அமுதவாணன், தவமணி பங்கேற்றனர்.
நன்றி:தினகரன்
0 coment rios: