Tuesday, April 18, 2017

மே 14 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4,850 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் (Consortium of Indian Petroleum Dealers) அழைப்பை ஏற்று, பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், இந்த அறிவிப்பு, வருகிற மே மாதம் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அதன்படி, சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை 24 மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் இனி இயங்காது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் விடுமுறை அளிக்கப்படுவதாக  பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: