
பேராவூரணி காச நோயை கண்டறிய நடமாடும் பரிசோதனை வாகனம்.
காசநோயை கண்டறியக் கூடிய நவீன கருவிகள் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம் பேராவூரணி வட்டாரத்திற்கு வந்தது. இந்த வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த நவீன நடமாடும் காசநோய் கண்டறியும் பரிசோதனை வாகனத்தை (CBNAAT) செருவாவிடுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தர்ராஜன் முன்னிலையில், மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

0 coment rios: