Wednesday, October 11, 2017

பயிர் காப்பீடு இழப்பீடு கோரி மறியல் முடிவு.



பேராவூரணி ஒன்றியம், சித்தாதிக்காடு கிராம விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை காலை (அக். 13) சித்தாதிக்காட்டில் சாலை மறியல் செய்ய கிராம மக்கள், விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்தது: இக்கிராமத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முற்றிலும் பயிர் பாதிப்படைந்த நிலையிலும் இழப்பீட்டு தொகை வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து கடந்த 4.09.2017 -ல் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் 13.09.2017-ல் சொர்ணக்காடு கிராமத்தில் நடைபெற்ற ஆட்சியரின் குறைதீர் முகாமில் நினைவூட்டல் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளின் வேதனையறியாத அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்தும் பயிர் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் மறியல் போராட்டம் செய்யப்போவதாகத் தெரிவித்தனர்.
நன்றி:தினமணி

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: