மேற்படியான பாதிப்புகள் உள்ள மரங்கள்கண்டறியப்பட்டு அவையாவும் அடையாளமிடப்பட்டு முதல் நிலை புள்ளி விபரங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரால் தயார் செய்யப்பட்டு மேற்படி விபரங்கள் யாவும் வேளாண்மை அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு பின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரால் மேற்கண்ட தென்னை மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்கப்படும். ஒப்புதல் வழங்கப்பட்ட 3 மாத காலத்திற்குள் அவை யாவும் அகற்றப்படல் வேண்டும்.தென்னை மரங்களை அகற்றி அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகளை நடுவதற்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 100 மரங்களுக்கு ரூ.4,000 வீதம் மானியமாக வழங்கப்படும்.
எனவே பேராவூரணி வட்டாரத்தில் உள்ளதென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது தென்னந்தோப்புகளில் இதுபோன்று ஒட்டுமொத்த பரப்பில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் உடனே தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு ஆர்.மதியரசன் தெரிவித்துள்ளார்.
0 coment rios: