Thursday, December 21, 2017

தஞ்சைக்கு அரியானாவில் இருந்து சரக்கு ரெயிலில் 3,500 டன் பச்சரிசி வந்தது.

மத்திய தொகுப்பில் இருந்து பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இதைப்போல தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்புக்கிடங்கிலும், தமிழக அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிலும் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

பச்சரிசி

இந்த நிலையில் நேற்று அரியானா மாநிலம் குருசேத்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 57 வேகன்களில் 3 ஆயிரத்து 500 டன் பச்சரிசி தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பச்சரிசி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: